மனதில் ஏற்படும் காயம் உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தையே மங்க வைக்கிறது.பதிவுலகம்தான் ஓரளவு கவலைகளை மறக்கடிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இன்னமும் அதே நிலையில்தான் நான், முகப்புத்தகத்தில்,பஸ்ஸில்,மெயிலில் ஆறுதல்படுத்திய, ஆறுதலாய் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
########################################################################
'அந்த டேபிள்'ல இலையை எடும்மா'
'மூணாவது டேபிளுக்கு சாம்பார் கொண்டு போ'
காலை நேர பரபரப்பிலிருந்து உதயம் ஹோட்டல்.
' யோவ் எவ்ளோ நேரமாச்சு தோசைன்னு சொல்லி இன்னும் காணோமே சிறுகுடல பெருங்குடலு சாப்பிடறதுக்குள்ள கொண்டு வந்துரு' சர்வரை பார்த்து எகிறிக்கொண்டிருந்தவருக்கு கண்டிப்பா பி.பி. இருக்கும்..
ஓனரின் தம்பி கல்லாவை ஃபுல்லாவே ஆக்கிரமித்து இருந்தார்.
'தம்பீ ரெண்டு இட்லி ஒரு வடை மட்டும் போதும்பா'
அறுபதைத் தாண்டிய ஒருவர் சர்வர் குமரேசனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
'தெரியும் நீங்க அதுக்கு மேல ஆர்டர் பண்ண மாட்டீங்கன்னு அதான் டெய்லி வர்றீங்களே' வார்த்தைகளின் ஸ்வரம் மாறியிருந்தது.
'ராசு அந்த கிழத்துக்கு ரெண்டு இட்லியாம் சீக்கிரம் கொடு'
பெரியவரின் டேபிளில் இட்லியை அலட்சியமாக வைத்தான்.
பதினைந்து ரூபாய் பில்லை கவுண்டரில் செலுத்திவிட்டு வெளியேறினார் அந்தப் பெரியவர்..
சம்பள நாள்..
ஓனர் ராஜன் எல்லோருக்கும் பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு குமரேசனை மட்டும் உட்கார சொன்னார்.
'உனக்கு எத்தனை குழந்தைங்க?'
'ஆண் ஒன்னு பொன்னு ஒன்னுண்ணே'
'ரெண்டையுமே ஒரே மாதிரிதான் கவனிப்பியா இல்ல..?'
'இதென்ண்ணே கேள்வி ரெண்டையும் ஒரே மாதிரிதான் கவனிப்பேன்'
'ஓ அப்படியா அதேமாதிரிதான் இந்த எனக்குஹோட்டலும்
ஒரு டீ சாப்பிடறவரும் கஸ்டமருதான்,கல்யாண சாப்பாடு ஆர்டர் பண்றவரும் கஸ்டமர்தான்.
' நீ நேத்து இவர்கிட்ட என்ன சொன்னே'
அதே பெரியவர் இன்னொரு அறையிலிருந்து வரவும் மேற்கொண்டு பேச முடியாமல் குமரேசனின் உதடுகள் தந்தியடிக்க..
'இவரு என் சித்தப்பாதான் நம்ம ஹோட்டல் நிர்வாகம்,வேலையாட்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கிறதுக்காகவே ஒரு பத்து நாளா கஸ்டமர் மாதிரி வரச்சொன்னேன்.ஆனா உன் நடவடிக்கை 'ல மட்டும் வித்தியாசம். அது என்னய்யா ரெண்டு இட்லி சாப்பிடறவன் மட்டம்,நெறையா சாப்பிடறவன் ஒசத்தியா, ஒரு கண்'ல வெண்ணையையும் மறு கண்'ல சுண்ணாம்பையும் வெச்சிருக்ககூடாது உன் கணக்கு எல்லாம் செட்டில் பண்ணியாச்சு நீ கெளம்பலாம்..
'நன்றி மீண்டும் வருக' என்ற போர்டு குமரேசன் வெளியேறியபோது கண்ணில் பட்டது..