பாக்கெட் மணியும் பாலிதீன் பையும்..


--
கிண‌றுக‌ளில் இருக்கும் த‌ண்ணீர் இன்ப‌மாக‌ இருக்கும்; வீட்டு தேவைக‌ளுக்கும்,குளிய‌லுக்கு உத‌வ‌க்கூடிய‌ வ‌கையில் இருந்த‌வை இன்றைக்கு இப்ப‌டித்தான் இருந்த‌து கிண‌று என்று வ‌ரைந்து காட்ட‌ வேண்டிய‌ சூழ‌ல்; சாதார‌ண‌மாக‌ ப‌த்து அடி ஆழ‌த்திற்க்கு மேல்தான் இருக்கும்; முன்பெல்லாம் ம‌ழைக்கால‌த்தில் குள‌ம்,கிண‌று எல்லாம் நிறைந்து போதும் போதும் என்ற‌ள‌வுக்கு ம‌ழை கொட்டித் தீர்த்த‌து; ம‌ழை பெய்த‌ அந்த‌ காலை ம‌ண்ணெல்லாம் ஒருவித‌ ஈர‌ப்ப‌த‌த்தோடு ம‌ண்வாச‌மும் ம‌ண‌க்க‌ ம‌ன‌தினுள் ஒரு குளுமை ஆட்டோமேட்டிக்காக‌ குடி கொள்ளும்;

பால் என்ற‌ப‌டி சைக்கிளில் பால்கேனை க‌ம்பியால் த‌ட்டி ஒலியெழுப்பும் பால்கார‌ர்; ரெண்டு உள்ள‌ங்கைக‌ளையும் தேய்த்த‌ப‌டி வ‌ரும் அடுத்த‌ வீட்டுக்கார‌ர்; ச‌ட்டையை அக்குளில் வைத்து க‌ன‌மான‌ ப‌னிய‌னை போட்டு த‌லையில் துண்டை க‌ட்டிய‌ப‌டி வ‌ரும் கொத்த‌னார் என‌ அன்றைய‌ பொழுதுக‌ளில் ப‌ல‌வ‌ற்றை காண‌லாம் சொல்ல‌லாம்; ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌ காலையில் கிண‌று நிர‌ம்பியிருக்கிற‌தா என்ற‌ ஆவ‌ல் ஏற்ப‌டும்; போய் பார்த்தால் கிண‌ற்றின் க‌ழுத்து வ‌ரை த‌ண்ணீர் ஏறி கிண‌ற்றின் த‌ண்ணீரில் முருங்கைக்காய் இலை மித‌ப்ப‌தையும், நீண்ட‌ கால்க‌ளையுடைய‌ த‌ண்ணீரில் ஓடும் பூச்சி ஓடுவ‌தையும் பார்க்க‌லாம் [அந்த‌ பூச்சி பேர் தெரிய‌வில்லை]; த‌ண்ணீர் கை எட்டும் தூர‌த்தில் இருப்ப‌தால் க‌யிற்றின் துணையின்றி நேர‌டியாக‌வே த‌ண்ணீர் அள்ளும் செள‌க‌ரிய‌ம் இருந்த‌து;

ஜில் ஜில்லென்று அதிக‌ குளிரில் இருக்கும் அந்த‌ த‌ண்ணீர்; ப‌ட‌க்கென்று குவ‌ளையில் த‌ண்ணீரை எடுத்து உட‌ம்பில் ஊற்ற‌ முடியாத‌ அள‌வுக்கு த‌ண்ணீர் குளிர்ந்து இருக்கும்; அத‌னால் ஒரு குவ‌ளை த‌ண்ணீர் (எங்க‌ ஸ்லாங்கில் சொன்னால் 'மோண்டுட்டு வா' என்பார்க‌ள், அதாவ‌து 'மோண்டு என்றால் 'த‌ண்ணீரில் குவ‌ளையை முக்கி எடுத்துட்டு வா என்று அர்த்த‌ம்) முத‌லில் ஒரு கைக்கு ஊற்றிவிட்டு அப்புற‌ம் ம‌றுகைக்கு ஊற்றி மெதுவாக‌ த‌லைக்கு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி குளிச்சு முடிய‌ற‌துக்குள் ஸ்கூலில் இன்ட‌ர்வெல் பில் அடித்துவிடுவார்க‌ள்; அதே போல் இர‌வினில் வான் நிலாவை கிண‌ற்று த‌ண்ணீரில் பார்த்தால் அற்புத‌ த‌ருண‌மாக‌ இருக்கும் என‌ கேள்விப்ப‌ட்டிருக்கேன் ஆனால் பார்த்த‌தில்லை; இனிமே அடாப் ஃபோட்டோஷாப்பில் பிர‌மாத‌மாக‌ பார்க்க‌லாம்; வ‌டிவேலு 'கிண‌த்த‌ காணோம் என் கிண‌த்த‌ காணோம்'னு போலீஸ் ஸ்டேஷ‌னுக்கு ஓடி வ‌ருவார், அதே போல‌தான் இன்னைக்கும் நிலைமை ப‌ல‌ கிண‌றுக‌ளை தூர்த்து விட்டார்க‌ள்; வ‌டிவேலு பாஷையிலேயே சொன்னால் 'சார் கிண‌த்த‌ எங்கேயுமே காணோம் சார்';

----------------------------------------------------------------------------------------------------------

ரப்பர் மிட்டாய் என்பது என் சிறுவயதில் படுபிரபலம்; ஒரு நீண்ட தடித்த கம்பு அதில் பாதி கம்புலேர்ந்து மலைப்பாம்பு உடலைபோல் வளைந்து ஒட்டப்பட்டு வைத்திருக்கும் இனிப்பு சொர்க்கம்; ரோஸ்,பச்சை,வெள்ளை என கலர்கள் பின்னி பிசைந்திருக்கும் அந்த ரப்பர் மிட்டாயில் வாட்ச் செய்து தருவார்; அதை என் கைகளில் ஒட்டிவிடுவார்; அதை கையில் ஒட்டியதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம்; டுர் டுர் டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ரெண்டு கையையும் பைக் ஓட்டுவது மாதிரி முறுக்கிக்கிட்டு அரைக்கால் டவுசரோடு ஓடியது இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது; கையில் ஒட்டிய வாட்சை சாப்பிடாமல் வைத்திருந்து சாயங்காலம் சாப்பிட்டு இருக்கிறேன்; ரப்பர் மிட்டாய்க்காரர் தெருவிற்க்குள் வந்தால் ஒரே குதூகலம்தான்;அதேபோல் காசு மிட்டாயும் பிரபலம்; அதாவது ரோஸ் கலர் மிட்டாயை சிறிய அதற்கேற்ப பிளாஸ்டிக்கில் சுருட்டி வைத்திருப்பார்கள்; அஞ்சு பைசா அல்லது பத்து பைசா விலை; அந்த மிட்டாயை சப்பி சப்பி காசு இருக்கிறதா இல்லையான்னு பார்த்தே ஓய்ந்துடுவோம்; ரொம்ப எக்ஸைட்டிங்கான மூவ்மெண்ட் அது; காசு தட்டுப்பட்டால் ரவுசு தாங்காது; ‘ஹேய் எனக்கு வந்துருச்சுல்ல வந்துருச்சுல்ல’ என யாருக்கு காசு வருதோ அவன் கொண்டாடுவான்;அழகான அருமையான நினைவுகள் அவை; மாங்காய் கீத்து கீத்தா சீவி அரிசி பொடியோடு தொட்டு சாப்பிடுறது 'வெளி தீனிகளில் ஃபர்ஸ்ட் ஆக இருந்தது சின்ன வயசில்; அதற்க்கு அடுத்த வெளி தீனிகளில் கல்கோனாதான் அதிகம்; மறக்க முடியாதது; கூகிளான் உதவியோடு இந்த படத்தை பார்க்கும் போது முதல்வன்'ல சுஜாதா வசனம்தான் நினைவுக்கு வருது;

'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'

----------------------------------------------------------------------------------------------------------
பாக்கெட் மணி’ பத்தின நீயா நானா விவாதம் பார்த்தேன்; பாக்கெட் மணி கொடுக்கிறது ஒரு சோஷியல் ஆக்டிவிட்டி சார்’ங்குது ஒரு பொண்ணு; இப்பவே இப்படி இருக்கு நிலைமை; என் மகன் வயசு நாலு; சைக்கிள் கேட்கிறான் வாங்கி கொடுத்தாச்சுங்கிறது அடுத்த விஷயம் ஆனா காலேஜ் போற நேரங்களில் என்ன வாங்கி கேப்பானோ என நினைக்கும்போது பகீர்’ன்னு இருக்கு; வர்ற/வளர்ற ஜெனரேஷனை நினைச்சா பிள்ளைகள் பெறும் ஆசையே தோன்றாது போலிருக்கு; ஒரு நேரத்தில் ஏன் இப்பகூட ‘குழந்தையில்லாத/ ஒரு குழந்தை மட்டுமே உள்ள எந்த தம்பதிகளையும் ‘ஏன் குழந்தையில்லை/ அடுத்த குழந்தை எப்ப’ன்ற கேள்வியெல்லாம் மறைந்துவிட்டது என்பது நிதர்சனம்;
----------------------------------------------------------------------------------------------------------

போன மாதம் ஒருநாள் மாலை ஆறரை மணி அளவில் எங்கள் அலுவலகம் அருகில்; டபுள் டோர் மட்டுமே கொண்ட கார் இது; ஒரு பெண் ஐந்து மாத குழந்தையை பின் சீட்டில் வைத்தப்படி காரை ஓட்டி வந்திருக்கிறாள் அவள வீட்டிலிருந்து அவளுடைய சகோதரி வீட்டிற்கு (எங்கள் அலுவலகத்தின் பக்கத்திலிருக்கிறது அச் சகோதரி வீடு) வந்து காரை நிறுத்தி டிரைவிங் சீட்லேர்ந்து இறங்கி கார் கதவை திறந்தபடியே வைத்துவிட்டு சகோதரி வீட்டின் கதவை தட்ட கொஞ்சம் இடைவெளியில் (100 மீ) இருக்கும் வீட்டின் கதவை தட்டுவதற்க்குள் இங்கே கார் கதவு காற்று அடித்ததில் பூட்டிக்கொண்டது; சைல்ட் லாக் செய்திருக்கிறாள் கார் சாவியும் உள்ளே குழந்தையும் உள்ளே; என்ஜினும் ஆஃப் செய்யப்பட்டு உள்ளே ஏசியும் ஆஃப்; மொபைலும் உள்ளே மாட்டிக்கொண்டது; யாரை கூப்பிடுறது என்றே தெரியாமல் எங்கள் அலுவலகத்தில் வந்து ஹெல்ப் ப்ளிஸ் என்றதும் எல்லோரும் ஓடிப்போய் பார்த்து அவசர அவசரமாக ஸ்க்ரூ ட்ரைவர் மற்றும் இதர ஸ்பேர் பார்ட்ஸுடன் எங்கள் டிரைவர் வரவழைக்கப்பட்டு முதலில் கார் கண்ணாடியில் சுற்றி இருக்கும் ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் கிழிக்கும் பணி ஆரம்பாகி விடுவதற்க்குள் உள்ளே குழந்தை அழ ஆரம்பிக்க தாயும் அழ ஆரம்பித்து விட்டாள்; அவளை தேற்ற வார்த்தையில்லை; அடுத்த இருபத்தைந்து நிமிஷத்தில் கார் கண்ணாடியையும் நாலு பேர் முழு பலம் கொண்டு கீழே இறக்க அந்த தாயின் ப்ரார்த்தனையும் மற்றும் அனைத்து நண்பர்களின் முயற்சியில் திறந்தது; அக் குழந்தையை தூக்கி அதன் உச்சிதனை முகர்ந்து ஆனந்த கண்ணீரை விட்டாள் அந்த சகோதரி;

எங்களுக்கு கண்கள் பணித்தது.

----------------------------------------------------------------------------------------------------------
சென்னையிலிருந்த நேரங்களில் அதிகம் பயணம் செய்தது எலெக்ட்ரிக் ட்ரெய்ன்களில்தான்; பல்லவன் பேருந்துகளில் பெரும்பாலும் இல்லை; பீச் ஸ்டேஷனில் ஆரம்பித்து தாம்பரம் வரை அதிகமாய் போயிருக்கிறேன்; கண் தெரியாத பாடகர், கடலை விற்பவர், கடலை போடுபவர், ஜன்னலோர சீட்டுக்கேட்டு அடம்பிடிக்கும் சிறுவர்கள், ஜன்னல் வழி தெரியும் சரவணா ஸ்டோர்,ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்,ரத்னா ஸ்டோர் என தாம்பரம் சானிடோரியம் வரை போற வேகம்,நேரம் தெரியாது; அருமையான அனுபவம்; சென்னைக்கான வேகமான வாழ்க்கையில் மனிதர்களின் பரபரப்போடு எலெக்ட்ரிக் ட்ரெய்ன்கள்; --------------------------------------------------------------------------------------------
  
மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் ஹிட்சாக்கின் ‘STRANGERS ON A TRAIN’ இப்ப பார்த்து முடிச்சேன்; ஸ்க்ரீன்ப்ளே சான்ஸ்லெஸ்; என்ன மாதிரியான முடிச்சுகள் எப்படி எங்கே யாரால் அவிழ்க்கப்படுகிறது என்பதை லாவகமாக சொல்வதில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை; குட் எண்டர்டெய்னர்; சூப்பர்;
--------------------------------------------------------------------------------------------
பக்கம் பக்கமா எழுதுவதை ஒரு கார்ட்டூனில் சொல்லமுடியும் என நிரூபிக்கும் கார்ட்டூன்; ஹேட்ஸ் ஆஃப் டூ கார்ட்டூனிஸ்ட்;

 -------------------------------------------------------------------------------------------- 
 படித்ததில் பிடித்தது:

1) 'வாழ்க்கை என்பது எப்படி இருக்க வேண்டும்?'

''வைரமுத்து எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, 'ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் இல்லாமல் தொடங்க வேண்டும், மனச்சிக்கல் இல்லாமல் முடிய வேண்டும்!' ''

- அ.சுசிலா, தஞ்சாவூர்.

.........
2) முரண்'  என்பதற்கு உதாரணம்?

'பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி எனச் சொல்லிவிட்டு, மரக்கன்றுகளை நட பாலிதீன் பைகளிலேயே மரக்கன்றுகளை வைத்துக் கொடுப்பது!'

- என்.சீதாலெஷ்மி, சென்னை. @விகடன் நானே கேள்வி நானே பதில்.

.........

3) சுஜாதாவின் பதிலில் இருக்கும் நக்கலை பாருங்கள் :)

கேள்வி: ஆங்கிலத்தில் 'POUR' என்றால் தமிழில் 'வார்' (வார்த்தல்) என்றாகிறது; இதுபோல் வேறு மொழி வார்த்தைகள் இருக்கின்றனவா? [ராணி...ஈரோடு]

பதில்: 'பனி என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் தெரியும்; அதே சொல்லுக்கு தெலுங்கில் 'வேலை' என்று அர்த்தம்; மலையாளத்தில் 'காய்ச்சல்' என்று பொருள்; 'தமிழ்ப் பனியில் தெலுங்கு 'பனி செய்தால் மலையாளப் பனி' வரும்.

.........

4) சலூனில் கழுத்து முதல் கால்வரை மூடியிருக்கும்போது மூக்கில் அரிக்கும் பாருங்க அதுக்கு பேர்தான் கொலவெறி.

......... 
5) EB'க்கு போன் போட்டு கரண்ட் எப்ப வரும்னு கேட்டா உன் மொபைல்ல இன்னமும் சார்ஜ் இருக்கான்னு கேட்கிறான்.

.........   
பிடித்த புகைப்படம் ஃபேஸ்புக்கிலிருந்து:



அன்புடன்,

அஹமது இர்ஷாத்


Post Comment

2 வம்புகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்...

Ahamed irshad said...

மிக்க நன்றிங்க தனபாலன்..


|| தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்...||

கண்டிப்பா...

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates