பெயிண்ட் வாச‌ம்...

 ...

ப‌வுட‌ர் அடித்து
த‌லைவாரி
ஸ்டுடியோப் போய்
கோட் போட்டு
ஒன்றுக்கு
நாலுமுறை
ச‌ரிபார்த்து
எடுத்த‌
எவ‌னுடைய‌
பாஸ்போர்ட்
சைஸ் போட்டோவோ
எல்லோர் காலிலும்
மிதிப‌ட்ட‌து அன்றொரு
காலையில்..
....
எல்லோருக்கும்
நேரில் போய்
கூப்பிட்டு
சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள்
அனைத்து உற்றார்
உற‌வுக‌ளோடும்
சாப்பாடு போட்டு
க‌ளைப்பில் அந்த‌
புது வீட்டின்
உள் அறையில்
உட்கார்ந்த‌ போது
பெயிண்ட் வாச‌த்தில்
தெரிந்த‌து முப்ப‌து
வ‌ருஷ‌ உழைப்பை
தின்ற‌ விஷ‌ய‌ம்..
....

Post Comment

7 வம்புகள்:

'பரிவை' சே.குமார் said...

இரண்டு கவிதைகளும் எதார்த்தத்தை உணர்த்தும் அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

இரண்டு கவிதைகளும் நச் சென்று இருந்தது இர்ஷாத்

sabeer.abushahruk said...

முதல் கவிதைக்கும் கவலைக்கும்...வருத்தங்கள்

இரண்டாவது கவிதைக்கும் கருவிற்கும் வாழ்த்துகள்

ZAKIR HUSSAIN said...

வர வர கவிதை எழுதுபவர்களை கண்டால் பொறாமையாக இருக்கிறது. மாஞ்சு மாஞ்சு எழுதற விஷயத்தை சில வரிகளில் அவர்கள் சொல்லும் லாவகம்.

இரண்டு கவிதையும் சுப்பர். யார் எழுதியது என பதியவில்லை?

Ahamed irshad said...

சே.குமார், ச‌ர‌வ‌ண‌ன்,ச‌கோ.ச‌பீர்,ச‌கோ.ஜாஹீர் ந‌ன்றிக‌ள்..

ச‌கோ.ஜாஹீர் அவ‌ர்க‌ளே அடுத்த‌ த‌ட‌வை ரெண்டு புள்ளி வெச்சாலும் என் பேரை அடியில் போட்டு விடுகிறேன்..நாந்தாங்க‌ எழுதிய‌து...அட‌ ந‌ம்புங்க‌ :))

Admin said...

இரண்டும் நடைமுறை வாழ்வின் உண்மைகள்..

இரண்டாவதில் உள்ள வலிகளினை அனுபவித்தால்த்தான் உணரமுடியும்.. வாழ்த்துக்கள் இர்ஷாத் !

Shameed said...

நல்ல வாசமும் மனமுமா இருக்கு கவிதை

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates