டிகிரி படித்திருந்தால்
இப்படி 45 டிகிரி
செல்சியஸில் ரோடு போட
தேவையிருந்திருக்காதோ...
இரண்டு அறிமுகங்கள்..
ஆஹா பக்கங்கள் அப்துல் காதர்.. இவர் எழுத்தில் சிரிப்பை வரவழைக்கும் தந்திரம் கொண்டவர்.சமீபத்தில் இவர் எல்லோருக்கும் பரிச்சயம் இருந்தாலும் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.கதை நன்றாக எழுதுவார்..கவிதையும் எழுதினால் நலம்.ஆரம்பத்தில் ஆங்காங்கே பதிவுகளில் கமெண்ட்'ஸ் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தவர் பதிவு எழுத வந்தது சிறப்பு.. வாழ்த்துக்கள்...
அடுத்து என் தம்பி தவ்சிப்...PAGE TAUSIF என்கிற வலைப்பூவில் எழுதிக்கொண்டு வருகிறார். ஆங்கிலத்தில்தான் எழுதி வருகிறார் அடுத்த செம்மொழி மாநாட்டுக்குள் தமிழில் எழுதுவார் என நம்பலாம்.சிறுவயதிலேயே வெளிநாட்டில் படிக்கும் சூழலில் இருந்ததால் தமிழ் கொஞ்சம் தகராறு.சொல்லியிருக்கிறேன் பார்ப்போம்.வாழ்த்துக்கள்.
சகோதரி ஆசியா உமர் விருது ஒன்று கொடுத்திருக்கிறார்.நான் ஊரில் இருந்த நேரத்தில் கொடுத்திருந்தார் அதனால் வாங்க லேட்டாகிவிட்டது.ரொம்ப நன்றி. அத அப்டிக்கா வாங்கி இப்டிக்கா கொடுக்கிறேன் இவங்களுக்கு..




